என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Wednesday, March 28, 2012

விமல் வாய்ப்பை லபக்கிய சிவ கார்த்திகேயன்

Actor Vimals anger over budding actor Siva Karthikeyan
தொழில் என்றால் போட்டி, பொறாமை எல்லாம் இல்லாமல் போகுமா என்ன!! அப்படித்தான் ஆகி விட்டது விமல் - சிவ கார்த்திகேயன் கதையும். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி விமலை விம்ம வைத்திருப்பதாக ஊரெங்கும் ஒரே பேச்சு.
விசாரித்தால், விமலை பொறுத்தவரை அவரது கால்ஷீட் காலண்டர் ஓவர் டைம் பார்த்தால் கூட  போதாது என்பது போல் நிரம்பி இருக்கிறதாம்.அவர். யார் தயாரிப்பாளர், யார் டைரக்டர் என்றெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கால்ஷீட் கொடுக்க முன்வந்ததன் விளைவு கைவசம் சுமார் ஏழு படங்கள் இருக்கிறது இப்போது. இந்த லட்சணத்தில் வாய்மொழியாக கொடுத்திருக்கிற உறுதிமொழி வேறு ஏகப்பட்ட இயக்குனர்களை இவர் பின்னால் சுற்ற வைத்திருக்கிறதாம். இப்படி விமல் கால்ஷீட்டை பெற முடியாத பல இயக்குநர்கள் சிவ கார்த்திகேயன் பக்கம் திரும்பி வருகின்றனராம்.
இது மட்டும் அல்ல, அண்மையில் ஜெய் கேட்ட சம்பளம் பொறுக்காமல் தனது கம்பெனி தயாரிக்கும் படத்தில் விமலை ஒப்பந்தம் செய்த ஏ.ஆர்.முருகதாஸ் கூட கால்ஷீட் குழப்பம் காரணமாக விமலை நீக்கிவிட்டு சிவ கார்த்திகேயனை ஒப்பந்தம் செய்துவிட்டார் என்பது தான் விமலின் விம்மலுக்கு காரணம் என்கிறது கோடம்பாக்கம். அடடா விமல் சார்..வட போச்சே...!?

மீண்டும் சொந்தப்படம் எடுக்கிறார் ஷங்கர்?!

Shankar to produce films again?
முதல்வன், காதல், இம்சை அரசன் 23ம் புலிக்கேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305ல் கடவுள், ஈரம், ரெட்டச்சுழி, அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களை இதுவரை தயாரித்திருக்கிறார் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். இவற்றில் ஒரு சில படங்கள் ஷங்கரின் பாக்கெட்டை பதம் பார்த்தன.
அதிலும் பிரபல இயக்குனர் ஒருவரை நடிக்க வைத்து இவர் தயாரித்த படத்தில் பெருத்த பிரச்சனையை சந்தித்தாராம் ஷங்கர். திடீரென்று அந்த " கரம் கூப்பி கும்பிடு போடும்" இயக்குநர் ஒரு கோடி சம்பளம் கேட்க, குழம்பிப் போனார் ஷங்கர் கொடுக்காமலிருந்தால் குரு துரோகமாகிவிடும் என்பதாலேயே பைசா குறையாமல் கொடுத்ததே பின் நாளில் சூடு கண்ட பூனையாக படக்கம்பெனியை அவர் மூட இந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது.
அதன்பின் சொந்தப்படம் என்றாலே பின்னங்கால் முதுகில் பட ஓட்டம் எடுத்தார் ஷங்கர். ஆனால் அவரது இறுக்கத்தை விலக்கி மீண்டும் சொந்தப்படம் எடுப்பது குறித்து யோசிக்க வைத்திருக்கிறாராம் ஒரு புது இயக்குநர்.
இதுவரைக்கும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேன். உங்க கதை திரும்பவும் என்னை சொந்தப்படம் எடுக்க சொல்லுது. நம்பிக்கையோட இருங்க. நல்ல செய்தி வரும் என்று அனுப்பி வைத்திருக்கிறாராம் ஷங்கர். நெசந்தானா ஷங்கர் ஜி?!

Wednesday, March 14, 2012

வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4

வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, எப்படி தீர்க்கும்? என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது? புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
அடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். லேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.bluetooth.com/ Pages/SmartLogos.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்

வழக்கு எண் 18/9 படத்திற்கு ஆஸ்கர் இசையமைப்பாளர்!

Oscar winner music director for Vazhakku Enn 18/9திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யு.டி.வி இணைந்து தயாரித்துள்ள உள்ள படம் வழக்கு எண் 18/9. காதல், சாமுராய், கல்லூரி படங்களின் டைரக்டர் பாலாஜி சக்திவேல் இயக்கி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ, ஊர்மிளா, மிதுன், மனிஷா என்ற நான்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தில் விஷேசம் என்னவென்றால், ஆஸ்கர் விருது பெற்ற பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஸ்மைல் பிங்கி என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்றவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த பிரசன்னா, இப்போது தான் முதன்முறையாக தமிழ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் அறிமுகமாவது ரொம்பவே மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் பிரசன்னா, காதல் படத்திற்கே நான் தான் இசையமைக்க வேண்டியது, ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். படத்தில் இரண்டு பாடல்கள் தான் என்றாலும் அதில் வழக்கமான பாடல்களை போன்று இல்லாமல் புதுவித முயற்சிகளை எடுத்து இருக்கிறாரம் பிரசன்னா.

அப்படின்னா, தமிழ் சினிமாவின் அடுத்த ரஹ்மானாக வருவாரா பிரசன்னா...?!

Saturday, March 10, 2012

வேலை வாய்ப்புகள்

யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 450 காலியிடங்கள்

யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் புரபேஷனரி அதிகாரி பணிகளில் சேர 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கம்ப்யூட்டர் பிரிவில் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். 2011-ல் நடத்தப்பட்ட வங்கிப் பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஓ.பி.சி. பிரிவினர் 125 மதிப்பெண்களும், பொதுப் பிரிவினர் 138 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு IBPS நடத்திய வங்கிப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50 (ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ மாற்றுத்திறனாளி பிரிவினர்), ரூ.200 (பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2012
விவரங்களுக்கு: http://www.unitedbankofindia.com/

செயில் நிறுவனத்தில் 523 டெக்னீஷியன் டிரெய்னி பணியிடங்கள்

த்திய அரசின்கீழ் இயங்கி வரும் செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிட்டர், எலெக்ட்ரீஷியன், வெல்டர், மெஷினிஸ்ட், டர்னர், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ், ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் ஏ.சி., டீசல் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2012
விவரங்களுக்கு: http://www.sail.shine.com/

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் 345 காலியிடங்கள்

த்திய அரசின் கீழ் இயங்கி வரும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிர்வாக அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.17,240
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2012
விவரங்களுக்கு: http://www.nationalinsuranceindia.com/

டிரெய்னி பைலட் பணியிடங்கள்

த்திய அரசின்கீழ் செயல்படும் கேபினெட் செக்ரட்டரியேட்டில் டிரெய்னி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் அல்லது ஹெலிகாப்டர் பைலட் கமர்ஷியல் லைசென்ஸ் பெற்றிருக்கவேண்டும். 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். மாத ஊதியம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2012
விவரங்களுக்கு: http://www.velaikal.blogsport.in/
2,195 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்

ல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை, சாஷாஸ்ட்ரா சீமா பால் ஆகிய நிறுவனங்களில் காலியாக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்புவதற்காக பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) தேர்வை நடத்தவுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளைநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2012
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR),
Staff Selection Commssion, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu - 600006
விவரங்களுக்கு: http://ssc.nic/ in

இ.சி.ஜி.சி. நிறுவனத்தில் புரபேஷனரி எக்ஸிக்யூட்டிவ் அதிகாரி பணியிடங்கள்
த்திய அரசின்கீழ் இயங்கி வரும் எக்ஸ்போர்ட் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் புரபேஷனரி எக்ஸிக்யூட்டிவ் அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு 2011-ல் IBPS நடத்திய வங்கிப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதல் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு துறையில் இளைநிலைப் பட்டம் அல்லது 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். மொத்தம் 30 காலியிடங்கள் உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2012
விவரங்களுக்கு: www.ecgc.in