என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, February 28, 2012

வாய்ப்புக்கு மேல் வாய்ப்பு! திக்குமுக்காடும் நயன்...

வாய்ப்புக்கு மேல் வாய்ப்பு! திக்குமுக்காடும் நயன்!!

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறாராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திருமணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகியுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியிருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் தன்னைப் பற்றி தமிழ் பத்திரிகை மற்றும் இணையதளங்களில் ஏகப்பட்ட செய்திகள் வெளியாவதை அறிந்த நயன்தாரா, அந்த செய்திகளை படித்து தெரிந்து கொள்வதற்காகவே தமிழ் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறாராம். விரைவில் எழுதவும் கற்றுக் கொள்வேன் என்று கூறும் நயன்தாராவுக்கு ஏற்கனவே நன்றாக தமிழ் பேசத் தெரியும் என்பது கூடுதல் தகவல்.

’3′ படத்தின் கிளைமாக்ஸை மாற்றச் சொன்ன ரஜினி


’3′ படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்த ரஜினி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சோகமாக இருப்பதற்கு பதில் மகிழ்ச்சியாக இருக்குமாறு வைக்கலாமே என்று அறிவுரை கூறியுள்ளார்.
ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் மூலம் புகழ் பெற்றது தனுஷ் மட்டுமல்ல அவரது மனைவி ஐய்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள 3 படமும் தான். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினி மகள் படத்தில் கமல் மகள் ஸ்ருதி நாயகியாக நடித்திருப்பது தான். இந்த படம் மார்ச் மாத இறுதியில் ரிலீஸாகிறது.
இந்த நிலையில் ’3′ படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த ரஜினி தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளதாகவும், ஐஸ்வர்யா சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிளைமாக்ஸ் சோகமாக முடிவது மட்டும் ரஜினிக்கு பிடிக்கவில்லை போன்று. அதனால் கிளைமாக்ஸை சந்தோஷமாக முடியும்படி மாற்றலாமே என்று அறிவுறுத்தியுள்ளார். சூப்பர்ஸ்டார் பேச்சுக்கு மறுபேச்சேது. கிளைமாக்ஸை மாற்றுவது குறித்து ஐஸ்வர்யாவும், தனுஷும் ஆலோசித்து வருகின்றனர்.

Thursday, February 9, 2012

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்வதற்கு




கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய முடியும்.

இந்த பட்டியலில் கூகுளின் மென்பொருட்கள் மட்டுமின்றி கூகுள் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype) உள்ளன.

இந்த மென்பொருட்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.

இந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும்.

அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணணியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.

தேவையானதை டிக் செய்து கீழே உள்ள தரவிறக்க பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும். பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்
                                           

மொபைலில் இலவசமாக ஃபேஸ்புக்

இணைய உலகை தன் பால் ஈர்த்துக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் தளம்,  மொபைல் போன்களில் இலவசமாக அதனை பார்க்கும் வசதியை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதை எவ்வாறு பார்க்கலாம்? என இங்கு பார்ப்போம்.


மொபைலில் இலவசமாக ஃபேஸ்புக்கை பார்க்க 0.facebook.com என்ற முகவரியை பயன்படுத்தவும்.

இதில் சில வசதிகள் மட்டுமே பார்க்க முடியும். புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பார்க்க முடியாது. புகைப்படங்களை பார்க்க விரும்பினால் அதற்கு உங்கள் மொபைல் ஆப்பரேட்டர்கள் கட்டணம் வசூலிப்பார்கள்.

என்னவெல்லாம் செய்யலாம்?

1. உங்கள் status-ஐ Update செய்யலாம்.

2. நண்பர்களின் Updates-களை பார்க்கலாம்.

3. பிடித்தவற்றை Like செய்யலாம்.

4. நண்பர்களுக்கு செய்தி (Message) அனுப்பலாம், நமக்கு வந்திருக்கும் செய்திகளை படிக்கலாம்.

5. நண்பர்களின் பக்கங்களில் (Wall) ஏதாவது எழுதலாம்.



நானும் இதனை பயன்படுத்திப் பார்த்தேன். உண்மையில் நன்றாக இருந்தது. ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட மொபைல் கனெக்சன் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். எந்தெந்த மொபைல் கனெக்சன் வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம் என்ற பட்டியலை கீழுள்ள படத்தில் பார்க்கவும்.



Wednesday, February 8, 2012

சச்சினுக்காக தனுஷ் உருவாக்கிய பாடல்


தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது. டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது.

இதனால் KOLAVERI பாடல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது. பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கேட்டுக் கொண்டது.

இப்பாடல் எப்படி தயாராகி வருகிறது என்பது குறித்து தனுஷ் பேசி முதலில் ஒரு TEASER ஒன்றை வெளியிட்டார்கள். தற்போது அதன் முழு வீடியோ பதிவையும் வெளியீட்டு இருக்கிறார்கள்.

அவ்வீடியோ பதிவு வெளியான 1 மணி நேரத்திற்குள் இந்தியா முழுவதும் TWITTER TRENDINGல் 7ம் இடத்தை பிடித்து இருக்கிறது. சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் கொலவெறி பாடலை விட இப்பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

வெளியான 1 மணி நேரத்திற்குள் TWITTER TRENDINGல் இடம் பெற்று இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தனுஷ் மற்றும் அனிருத்.

அப்பாடல் வீடியோ வடிவில்...


4000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக நினைக்கப்பட்ட விலங்கு



நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக நினைக்கப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக நினைக்கப்பட்ட விலங்கு  இனம் ஒன்று இப்போதும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிசயமானது நிகழ்ந்துள்ளது.
இது mammoths என்று அழைக்கப்படும் யானை போன்ற வடிவம் கொண்ட ஒரு விலங்காகும்.
சைபீரியாவின் பனி படர்ந்த ஆற்றைக் கடந்து போகையில் தான் மேற்படி காணொளி எடுக்கப்பட்டுள்ளது.
சைபீரியாவின் Chukotka Autonomous Okrug பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட காணொளியானது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.
குறித்த பிரதேசம் இதுவரை மனிதர்களின் காலடித்தடம் படாத இடமாகவும் இருந்துள்ளது