என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, July 22, 2011

ரஜினிகாந்த் நடித்துள்ள படங்களின் பட்டியல்

1. அபூர்வ ராகங்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 18-08-1975

2. கதா சங்கமா - (கன்னடம் - புத்தண்ணா) - 23-01-1976

3. அந்துலேனி கதா - (தெலுங்கு - கே. பாலச்சந்தர்) - 27-02-1976

4. மூன்று முடிச்சு - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 22-10-1976

5. பாலு ஜேனு - (கன்னடம் - குன்னிகல் நாக பூஷணம் பாலன்) - 10-12-1976

6. அவர்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 25-02-1977

7. கவிக்குயில் - (தமிழ் - தேவராஜ், மோகன்) - 29-07-1977

8. ரகுபதி ராகவன் ராஜாராம் - (தமிழ் - துரை) - 12-08-1977

9. சிலக்கம்மா செப்பண்டி - (தெலுங்கு - எரங்கி சர்மா) - 13-08-1977

10. புவனா ஒரு கேள்விக்குறி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 02-09-1977

11. ஒண்டு பிரேமதா கதா - (கன்னடம் - எஸ்.எம். ஜோ சிமோன்) - 02-09-1977

12. 16 வயதினிலே - (தமிழ் - பாரதிராஜா) - 15-09-1977

13. சகோதர சவல் - (கன்னடம் - கே.எஸ்.ஆர். தாஸ்) - 16-09-1977

14. ஆடு புலி ஆட்டம் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 30-09-1977

15. காயத்ரி - (தமிழ் - ஆர். பட்டாபிராமன்) - 07-10-1977

16. குங்கும ரக்சே - (கன்னடம் - எஸ்.கே.ஏ. சாரி) - 14-10-1977

17. ஆறு புஷ்பங்கள் - (தமிழ் - கே.எம். பாலகிருஷ்ணன்) - 10-11-1977

18. தொலிரேயி கடிச்சிண்டி - (தெலுங்கு - கே.எஸ். ராமி ரெட்டி) - 17-11-1977

19. ஆமே கதா - (தெலுங்கு - கே. ராகவேந்திர ராவ்) - 18-11-1977

20. கலாட்டா சம்சாரா - (கன்னடம் - சி.வி. ராஜேந்திரன்) - 02-12-1977

21. சங்கர் சலீம் சைமன் - (தமிழ் - பி. மாதவன்) - 10-02-1978

22. கில்லாட் கிட்டு - (கன்னடம் - கே.எஸ்.ஆர். தாஸ்) - 03-03-1978

23. அன்னடம்முளு சவால் - (தெலுங்கு - கே.எஸ்.ஆர். தாஸ்) - 03-03-1978

24. ஆயிரம் ஜன்மங்கள் - (தமிழ் - துரை) - 10-03-1978

25. மாது தப்படமகா - (கன்னடம் - பெக்கட்டி சிவராம்) - 31-03-1978

26. மாங்குடி மைனர் - (தமிழ் - வி.சி. குகநாதன்) - 02-06-1978

27. பைரவி - (தமிழ் - எம். பாஸ்கர்) - 02-06-1978

28. இளமை ஊஞ்சலாடுகிறது - (தமிழ் - ஸ்ரீதர்) - 09-06-1978

29. சதுரங்கம் - (தமிழ் - துரை) - 30-06-1978

30. வணக்கத்துக்குரிய காதலியே - (தமிழ் - திரிலோகசந்தர்) - 14-07-1978

31. வயசு பிலிசிண்டி - (தெலுங்கு - ஸ்ரீதர்) - 04-08-1978
32. முள்ளும் மலரும் - (தமிழ் - மகேந்திரன்) - 15-08-1978
33. இறைவன் கொடுத்த வரம் - (தமிழ் - ஏ. பீம்சிங்) - 22-09-1978
34. தப்பிட தலா - (கன்னடம் - கே. பாலச்சந்தர்) - 06-10-1978
35. தப்புத் தாளங்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 30-10-1978
36. அவள் அப்படித்தான் - (தமிழ் - சி. ருத்ரய்யா) - 30-10-1978
37. தாய் மீது சத்தியம் - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 30-10-1978
38. என் கேள்விக்கு என்ன பதில் - (தமிழ் - ஆர். மாதவன்) - 09-12-1978
39. ஜஸ்டிஸ் கோபிநாத் - (தமிழ் - யோகானந்த்) - 16-12-1978
40. ப்ரியா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 22-12-1978
41. ப்ரியா - (கன்னடம் - எஸ்.பி. முத்துராமன்) - 12-01-1979
42. குப்பத்து ராஜா - (தமிழ் - ராமண்ணா) - 12-01-1979
43. இதாரு அசாத்யுலே (தெலுங்கு - கே.எஸ்.ஆர். தாஸ்) - 25-01-1979
44. அலாவுதினும் அற்புத விளக்கும் - (மலையாளம் - ஐ.வி. சசி) - 14-04-1979
45. நினைத்தாலே இனிக்கும் (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 14-04-1979
46. அந்தமைனா அனுபவம் (தெலுங்கு - கே. பாலச்சந்தர்) - 19-04-1979
47. அலாவுதினும் அற்புத விளக்கும் - (தமிழ் - ஐ.வி.சசி) - 08-06-1979
48. தர்ம யுத்தம் - (தமிழ் - ஆர்.சி. சக்தி) - 29-06-1979
49. நான் வாழவைப்பேன் - (தமிழ் - டி. யோகானந்த்) - 10-08-1979
50. டைகர் - (தெலுங்கு - என். ரமேஷ்) - 05-09-1979
51. ஆறிலிருந்து அறுபது வரை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-09-1979
52. அன்னை ஓர் ஆலயம் - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 19-10-1979
53. அம்மா எவரிக்கைன அம்மா - (தெலுங்கு - ஆர். தியாகராஜன்) - 08-11-1979
54. பில்லா - (தமிழ் - ஆர். கிருஷ்ணமூர்த்தி) - 26-01-1980
55. ராம் ராபர்ட் ரஹீம் - (தெலுங்கு - விஜய நிர்மலா) - 31-05-1980
56. அன்புக்கு நான் அடிமை - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 04-06-1980
57. காளி - (தமிழ் - ஐ.வி. சசி) - 03-07-1980
58. மாயதாரி கிருஷ்ணடு - (தெலுங்கு - ஆர். தியாகராஜன்) - 19-07-1980
59. நான் போட்ட சவால் - (தமிழ் - புரட்சிதாசன்) - 07-08-1980
60. ஜானி (தமிழ் - மகேந்திரன்) - 15-08-1980
61. காளி (தெலுங்கு - ஐ.வி. சசி) - 19-09-1980
62. எல்லாம் உன் கைராசி - (தமிழ் - எம்.ஏ. திருமுகம்) - 09-10-1980
63. பொல்லாதவன் - (தமிழ் - வி. ஸ்ரீனிவாசன்) - 06-11-1980
64. முரட்டு காளை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 20-12-1980
65. தீ - (தமிழ் - ஆர். கிருஷ்ணமூர்த்தி) - 26-01-1981
66. கழுகு - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 06-03-1981
67. தில்லு முல்லு - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 01-05-1981
68. கர்ஜனை - (தமிழ் - சி.வி. ராஜேந்திரன்) - 06-08-1981
69. கர்ஜனம் - (மலையாளம் - சி.வி. ராஜேந்திரன்) - 14-08-1981
70. நெற்றிக்கண் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 15-08-1981
71. கர்ஜனே - (கன்னடம் - சி.வி. ராஜேந்திரன்) - 23-10-1981
72. ராணுவ வீரன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 26-10-1981
73. போக்கிரி ராஜா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1982
74. தனிக்காட்டு ராஜா - (தமிழ் - வி.சி. குகநாதன்) - 12-03-1982
75. ரங்கா - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 14-04-1982
76. புதுக்கவிதை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 11-06-1982
77. எங்கேயோ கேட்ட குரல் - (தமிழ் - எஸ்.பி.முத்துராமன்) - 14-08-1982
78. மூன்று முகம் - (தமிழ் - ஏ. ஜகந்நாதன்) - 01-10-1982
79. பாயும் புலி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1983
80. துடிக்கும் கரங்கள் - (தமிழ் - ஸ்ரீதர்) - 04-03-1983
81. அந்தா கானூன் - (இந்தி - டி. ராம ராவ்) - 07-04-1983
82. தாய் வீடு - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 14-04-1983
83. சிவப்பு சூரியன் - (தமிழ் - வி. ஸ்ரீனிவாசன்) - 27-05-1983
84. ஜீத் ஹமாரி - (இந்தி - ஆர். தியாகராஜன்) - 17-06-1983
85. அடுத்த வாரிசு - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 07-07-1983
86. தங்க மகன் - (தமிழ் - ஏ. ஜெகந்நாதன்) - 04-11-1983
87. மேரி அதாலத் - (இந்தி - ஏ.டி. ரகு) - 13-01-1984
88. நான் மகான் அல்ல - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1984
89. தம்பிக்கு எந்த ஊரு - (தமிழ் - ராஜசேகர்) - 20-04-1984
90. கை கொடுக்கும் கை - (தமிழ் - மகேந்திரன்) - 15-06-1984
91. எதே நாசவல் - (தெலுங்கு - புரட்சிதாசன்) - 15-06-1984
92. அன்புள்ள ரஜினிகாந்த் - (தமிழ் - கே. நட்ராஜ்) - 02-08-1984
93. கங்குவா - (இந்தி - ராஜசேகர்) - 14-09-1984
94. நல்லவனுக்கு நல்லவன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 22-10-1984
95. ஜான் ஜானி ஜனார்த்தன் - (இந்தி - டி. ராம ராவ்) - 26-10-1984
96. நான் சிகப்பு மனிதன் - (தமிழ் - எஸ். ஏ. சந்திரசேகர்) - 12-04-1985
97. மஹாகுரு - (இந்தி - எஸ். எஸ். ரவிச்சந்திரா) - 26-04-1985
98. உன் கண்ணில் நீர் வழிந்தால் (தமிழ் - பாலுமகேந்திரா) - 20-06-1985
99. வபாதார் - (இந்தி - தாசரி நாராயண ராவ்) - 01-09-1985
100. ஸ்ரீராகவேந்திரா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 01-09-1985

101. பேவஃபாய் - (இந்தி - ஆர். தியாகராஜன்) - 20-09-1985
102. படிக்காதவன் - (தமிழ் - ராஜசேகர்) - 11-11-1985
103. மிஸ்டர் பாரத் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 10-01-1986
104. நான் அடிமை இல்லை - (தமிழ் - துவாரகீஷ்) - 01-03-1986
105. ஜீவன போராட்டம் - (தெலுங்கு - ராஜசந்திரா) - 10-04-1986
106. விடுதலை - (தமிழ் - கே. விஜயன்) - 11-04-1986
107. பகவான் தாதா - (இந்தி - ஜே. ஓம் பிரகாஷ்) - 25-04-1986
108. அசலி நக்லி - (இந்தி - சுதர்சன் நாக்) - 17-10-1986
109. தோஸ்தி துஸ்மன் - (இந்தி - டி. ராம ராவ்) - 31-10-1986
110. மாவீரன் - (தமிழ் - ராஜசேகர்) - 01-11-1986
111. வேலைக்காரன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 07-03-1987
112. இன்சாப் கோன் கரேகா - (இந்தி - சுதர்சன் நாக்) - 19-06-1987
113. ஊர்க்காவலன் - (தமிழ் - மனோபாலா) - 04-09-1987
114. மனிதன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 21-10-1987
115. உத்தர் தக்ஷின் - (இந்தி - பிரபாத் கன்னா) - 13-11-1987
116. தமாசா - (இந்தி - ரமேஷ் அஹுஜா) - 26-02-1988
117. குரு சிஷ்யன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 13-04-1988
118. தர்மத்தின் தலைவன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 24-09-1988
119. பிளட் ஸ்டோன் - (ஆங்கிலம் - டுவைட் லிட்டில்) - 07-10-1988
120. கொடி பறக்குது - (தமிழ் - பாரதிராஜா) - 08-11-1988
121. ராஜாதி ராஜா - (தமிழ் - ஆர். சுந்தர் ராஜன்) - 04-03-1989
122. சிவா - (தமிழ் - அமீர்ஜான்) - 05-05-1989
123. ராஜா சின்ன ரோஜா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 20-07-1989
124. மாப்பிள்ளை - (தமிழ் - ராஜசேகர்) - 28-10-1989
125. பிரஸ்டாச்சார் - (இந்தி - ரமேஷ் சிப்பி) - 01-12-1989
126. சால்பாஸ் - (இந்தி - பங்கஜ் பராசார்) - 08-12-1989
127. பணக்காரன் - (தமிழ் - பி. வாசு) - 14-01-1990
128. அதிசய பிறவி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 15-06-1990
129. தர்மதுரை - (தமிழ் - ராஜசேகர்) - 14-01-1991
130. ஹம் - (இந்தி - முகுல் எஸ். ஆனந்த்) - 01-02-1991
131. பரிஸ்தே - (இந்தி - அனில் சர்மா) - 22-02-1991
132. கூன் கா கர்ஜ் - (இந்தி - முகுல் எஸ். ஆனந்த்) - 01-03-1991
133. பூல் பனே அங்காரே - (இந்தி - கே.சி. பொகாடியா) - 12-07-1991
134. நாட்டுக்கு ஒரு நல்லவன் - (தமிழ் - வி. ரவிச்சந்திரன்) - 02-10-1991
135. தளபதி - (தமிழ் - மணிரத்னம்) - 05-11-1991
136. மன்னன் - (தமிழ் - பி. வாசு) - 14-01-1992
137. தியாகி - (இந்தி - கே.சி. பகோடியா) - 29-05-1992
138. அண்ணாமலை - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 27-06-1992
139. பாண்டியன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 25-10-1992
140. இன்சானியத் கே தேவ்தா - (இந்தி - கே.சி. பகோடியா) - 12-02-1993
141. எஜமான் - (தமிழ் - ஆர்.வி. உதயகுமார்) - 18-02-1993
142. உழைப்பாளி - (தமிழ் - பி. வாசு) - 24-06-1993
143. வள்ளி - (தமிழ் - கே. நட்ராஜ்) - 24-06-1993
144. வீரா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 14-04-1994
145. பாட்ஷா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 12-01-1995
146. பெத்தராயுடு - (தெலுங்கு - பி. ரவிராஜ்) - 15-06-1995
147. ஆதங்க் ஹீ ஆதங்க் - (இந்தி - திலீப் சங்கர்) - 04-08-1995
148. முத்து - (தமிழ் - கே.எஸ். ரவிக்குமார்) - 23-10-1995
149. பாக்யதேவ்தா - (பெங்காலி - ரகுராம்) - 23-12-1995
150. அருணாச்சலம் - (தமிழ் - சுந்தர்.சி) - 10-04-1997
151. படையப்பா - (தமிழ் - கே.எஸ். ரவிக்குமார்) - 10-04-1999
152. பாபா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 15-08-2002
153. சந்திரமுகி - (தமிழ் - பி. வாசு) - 14-04-2005
154. சிவாஜி - (தமிழ் - சங்கர்) - 15-06-2007
155. குசேலன் - (தமிழ் - பி. வாசு) - 01-08-2008
156. எந்திரன் - (தமிழ் - சங்கர்) - 2010


கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சுலபமாகஅறிய

உங்களுக்கு உங்கள் கணினியை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள ஒரு சூப்பர் மென்பொருள். உண்மையிலேயே சொல்றேங்க இது சூப்பர் மென்பொருள். இந்த தகவல்கள் நம் கணினியிலும் இருக்கும் ஆனால் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு இடத்தில் செல்ல வேண்டும். அதில் சிரமும் இருக்காது. நம் கணினியில் தெரியாத ஒன்றும் இதில் தெரியும் அது நம் கணினியின் விண்டோ கீகள். எனக்கு ரொம்ப பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். 
பயன்கள் :

  • உங்கள் கணினியை பற்றி முழு தகவல்களையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வசதி அதுவும் சரியாக. 

  • உங்கள் கணினி எந்த பெயரில் இருக்கிறது என்பதில் ஆரம்பித்து IP முகவரி, OS, RAM, PROCESSOR, WINDOWS KEY , MONITOR, BROWSER, இப்படி அடுக்கி கொண்டே செல்லலாம். 

  • மேலும் நம் கணினியில் எந்தெந்த மென்பொருட்கள் நிறுவி உள்ளோம் அதனுடைய versons என்ன என்றும் காட்டுகிறது.

  • மறைந்துள்ள மென்பொருட்களையும் பட்டியலிட்டு காட்டுகிறது.

  • மற்றும் கணினியில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவலையும் காட்டுகிறது. 

  • இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. நேரடியாக இயக்கலாம்.

  • அளவு 1MB யை விட சிறியது. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
பயன் படுத்தும் முறை



  • கீழே உள்ள download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.  

  • நேரடியாக ரன் செயுங்கள். உங்கள் கணினி ஸ்கேன் ஆகி வரும். மேலே உள்ள மூன்று பட்டன்களை தேர்வு செய்து கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, July 19, 2011

உலகம் எப்படி உருவானது

மண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.
ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.
ஒளி தோன்றுக !
இதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.
கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.
அதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.
மறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து  ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.
பூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.
தண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.
 பூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.
நிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.
உலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.
எனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.
இப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.
தன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.
கடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.
ஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.
தன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.
விலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
இதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.
தரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.
மனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார்.  தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.
மனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.
அழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.
அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.
ஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.
பின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.
‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.
கடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.
மனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.
அன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.
அவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.
அப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.
மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.