என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Sunday, January 30, 2011

சோனியாகாந்தி -அறிய புகைப்படங்கள்

 சோனியாகாந்தியின் அறிய புகைப்படங்கள் சோனியாகாந்தி, இந்திராகாந்தி, நேரு, காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் அறிய புகைபடங்களை  காண...

















Friday, January 28, 2011

பயனுள்ள இணையதள முகவரிகள்

01. screenr.com – record movies of your desktop and send them straight to YouTube.
02. bounceapp.com – for capturing full length screenshots of web pages.
03. goo.gl – shorten long URLs and convert URLs into QR codes.
04. untiny.me – find the original URLs that’s hiding behind a short URLs.
05. localti.me – know more than just the local time of a city
06. copypastecharacter.com – copy special characters that aren’t on your keyboard.
07. topsy.com – a better search engine for twitter.
08. fb.me/AppStore – search iOS app without launching iTunes.
09. iconfinder.com – the best place to find icons of all sizes.
10. office.com – download templates, clipart and images for your Office documents.
11. woorank.com – everything you wanted to know about a website.
12. virustotal.com – scan any suspicious file or email attachment for viruses.
13. wolframalpha.com – gets answers directly without searching – see more wolfram tips.
14. printwhatyoulike.com – print web pages without the clutter.
15. joliprint.com – reformats news articles and blog content as a newspaper.
16. isnsfw.com – when you wish to share a NSFW page but with a warning.
17. e.ggtimer.com – a simple online timer for your daily needs.
18. coralcdn.org – if a site is down due to heavy traffic, try accessing it through coral CDN.
19. random.org – pick random numbers, flip coins, and more.
20. mywot.com – check the trust level of any website – example.
21. viewer.zoho.com – Preview PDFs and Presentations directly in the browser.
22. tubemogul.com – simultaneously upload videos to YouTube and other video sites.
23. truveo.com – the best place for searching web videos.
24. scr.im – share you email address online without worrying about spam.
25. spypig.com – now get read receipts for your email.
26. sizeasy.com – visualize and compare the size of any product.
27. whatfontis.com – quickly determine the font name from an image.
28. fontsquirrel.com – a good collection of fonts – free for personal and commercial use.
29. regex.info – find data hidden in your photographs – see more EXIF tools.
30. tineye.com – this is like an online version of Google Googles.
31. iwantmyname.com – helps you search domains across all TLDs.
32. tabbloid.com – your favorite blogs delivered as PDFs.
33. join.me – share you screen with anyone over the web.
34. onlineocr.net – recognize text from scanned PDFs and images – see other OCR tools.
35. flightstats.com – Track flight status at airports worldwide.
36. wetransfer.com – for sharing really big files online.
37. pastebin.com – a temporary online clipboard for your text and code snippets.
38. polishmywriting.com – check your writing for spelling or grammatical errors.
39. awesomehighlighter.com – easily highlight the important parts of a web page.
40. typewith.me – work on the same document with multiple people.
41. whichdateworks.com – planning an event? find a date that works for all.
42. everytimezone.com – a less confusing view of the world time zones.
43. warrick.cs.odu.edu – you’ll need this when your bookmarked web pages are deleted.
44. gtmetrix.com – the perfect tool for measuring your site performance online.
45. imo.im – chat with your buddies on Skype, Facebook, Google Talk, etc. from one place.
46. translate.google.com – translate web pages, PDFs and Office documents.
47. youtube.com/leanback – enjoy a never ending stream of YouTube videos in full-screen.
48. similarsites.com – discover new sites that are similar to what you like already.
49. wordle.net – quick summarize long pieces of text with tag clouds.
50. bubbl.us – create mind-maps, brainstorm ideas in the browser.
51. kuler.adobe.com – get color ideas, also extract colors from photographs.
52. followupthen.com – setup quick reminders via email itself.
53. lmgtfy.com – when your friends are too lazy to use Google on their own.
54. tempalias.com – generate temporary email aliases, better than disposable email.
55. pdfescape.com – lets you can quickly edit PDFs in the browser itself.
56. faxzero.com – send an online fax for free – see more fax services.
57. feedmyinbox.com – get RSS feeds as an email newsletter.
58. isendr.com – transfer files without uploading to a server.
59. tinychat.com – setup a private chat room in micro-seconds.
60. privnote.com – create text notes that will self-destruct after being read.
61. flightaware.com – live flight tracking service for airports worldwide.
62. boxoh.com – track the status of any shipment on Google Maps – alternative.
63. chipin.com – when you need to raise funds online for an event or a cause.
64. downforeveryoneorjustme.com – find if your favorite website is offline or not?
65. example.com – this website can be used as an example in documentation.
66. whoishostingthis.com – find the web host of any website.
67. google.com/history – found something on Google but can’t remember it now?
68. errorlevelanalysis.com – find whether a photo is real or a photoshopped one.
69. google.com/dictionary – get word meanings, pronunciations and usage examples.
70. urbandictionary.com – find definitions of slangs and informal words.
71. seatguru.com – consult this site before choosing a seat for your next flight.
72. sxc.hu – download stock images absolutely free.
73. imo.im – chat with your buddies on Skype, Facebook, Google Talk, etc. from one place.
74. wobzip.org – unzip your compressed files online.
75. vocaroo.com – record your voice with a click.
76. scribblemaps.com – create custom Google Maps easily.
77. buzzfeed.com – never miss another Internet meme or viral video.
78. alertful.com – quickly setup email reminders for important events.
79. encrypted.google.com – prevent your ISP and boss from reading your search queries.
80. formspring.me – you can ask or answer personal questions here.
81. snopes.com – find if that email offer you received is real or just another scam.
82. typingweb.com – master touch-typing with these practice sessions.
83. mailvu.com – send video emails to anyone using your web cam.
84. ge.tt – quickly send a file to someone, they can even preview it before downloading.
85. timerime.com – create timelines with audio, video and images.
86. stupeflix.com – make a movie out of your images, audio and video clips.
87. aviary.com/myna – an online audio editor that lets record, and remix audio clips online.
88. noteflight.com – print music sheets, write your own music online (review).
89. disposablewebpage.com – create a temporary web page that self-destruct.
90. namemytune.com – when you need to find the name of a song.
91. homestyler.com – design from scratch or re-model your home in 3d.
92. snapask.com – use email on your phone to find sports scores, read Wikipedia, etc.
93. teuxdeux.com – a beautiful to-do app that looks like your paper dairy.
94. livestream.com – broadcast events live over the web, including your desktop screen.
95. bing.com/images – automatically find perfectly-sized wallpapers for mobiles.
96. historio.us – preserve complete web pages with all the formatting.
97. dabbleboard.com – your virtual whiteboard.
98. whisperbot.com – send an email without using your own account.
99. sumopaint.com – an excellent layer-based online image editor.
100. lovelycharts.com – create flowcharts, network diagrams, sitemaps, etc.
101. nutshellmail.com – Get your Facebook and Twitter streams in your inbox.


படம் பாக்கும் போது ஆடியோ வேகமாக ஓடுகிறதா

கேமராக்களை வைத்து சுட்டு கிடைக்கும் வீடியோக்களில் சில வகையான AVI கோப்புகள் நம் ஹார்ட்டிரைவில் கன்னாபின்னாவென அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளுகின்றன. இதனை Mpeg கோப்புகளாக மாற்றினால் கோப்புகளின் அளவு கணிசமாக குறைவதோடு பெரிதாக தரமும் இழப்பதாக தெரியவில்லை. இப்படி 5Gig AVI கோப்பு ஒன்றை Mpeg ஃபார்மேட்டுக்கு மாற்றியதில் 1Gig ஆக மாறி ஹார்ட்டிரைவில் நிறைய எக்ஸ்ட்ரா இடம் கிடைத்தது . தரமும் நன்றாக இருந்தது.

Vlc media player-ல் இருக்கும் இன்னொரு அதிகமாக அறியப்படாத வசதி அதிலிருக்கும் வீடியோ/ஆடியோ கன்வர்டர் (Video/Audio converter). கொடுக்கப்படும் பலவிதமாக வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட் கோப்புகளை நமக்கு தேவையான வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட்டாக மாற்ற அதன் Convert வசதி உதவுகின்றது.

விஎல்சி மீடியா பிளயரை திறந்து அதில் Media-வை கிளிக்செய்து.
அதில் Convert/Save என்பதை தெரிவு செய்யவும்.

இங்கே File சட்டத்தில் Add-ஐ சொடுக்கி உங்கள் கோப்பை அங்கே சேர்த்து விடவும்.

இப்போது கீழே Convert/Save என்பதை சொடுக்கினால் அங்கே ஒரு புதிய Convert எனும் சட்டம் தோன்றும். அங்கே Profile என்பதில் எந்த ஃபார்மேட்டாக மாற்ற வேண்டுமோ அந்த ஃபார்மேட்டை தெரிவுசெய்யவும். பின் Start-யை கிளிக்கினால் உங்கள் வீடியோ தேவையான ஃபார்மேட்டுக்கும் மாற்றப்பட்டு விடும்.


 Track Synchronization வசதியையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். சில சமயங்களில் மூவி பார்க்கும் போது அதன் வீடியோவானது முந்திசென்று ஒலி லேட்டாக வர அது எரிச்சலூட்டிக்கொண்டிருக்கும்.

வீடியோவில் தோன்றும் மனிதர்களின் வாயசைவுக்கு ஒலிக்கும் வார்த்தைகள் ஒத்திருப்பதில்லை. இதை சரிசெய்ய உதவுவது தான் இந்த டிராக் சிங்க் வசதி.Vlc media player-ல் Tools-->Track Synchronization-ல் நொடிகளை கூட்டி குறைத்து ஆடியோவை
வீடியோவுக்கு இணையாக்கி கொண்டுவரலாம். சப்டைட்டில்கள் கூட கட்டுப்பாடின்றி ஓடினால் அவற்றையும் நம் வேகத்துக்கு கொண்டுவர இதில் வசதிகள்       கொடுக்கப்பட்டுள்ளன.

Thursday, January 27, 2011

நட்பு கவிதை

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!

கார் ரேஸ் வீடியோ


எனக்கு பிடித்த விளையாட்டுகளில் கார் ரேசும் ஒன்று. அருமையான கார் ரசே ஒன்று கிழே உள்ளது. கார் ரேஸ் வீடியோ







பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

Wednesday, January 26, 2011

2010 தமிழ் திரைப்பட நடிகைகளின் தரவரிசை

வெகு ஜன சினிமா ரசிகர்களும் சரி, எதார்த்த சினிமா ரசிகர்களும் சரி அஞ்சலி பெயரைத்தான் சென்ற வருடம் அதிகமாய் உச்சரித்திருப்பார்கள். அங்காடித்தெரு படத்தின் மூலம் அனைவரின் இதயத்தையும் நெகிழ வைத்தவர்.

பார்க்குறதுக்கு நம்ம பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மாதிரியே இல்ல என்று சொல்லும் அளவிற்கு அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ற அடக்கமான அழகு. சென்ற வருடம் ரெட்டைசுழி, அங்காடி தெரு, மகிழ்ச்சி என்ற மூன்று படங்கள். இதையெல்லாம் விட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கப் பாடலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது இவருக்கு இன்னொரு ஹைலைட். இந்த வருடம் விரைவில் வெளிவர இருக்கும் தூங்கா நகரம், கோ, தம்பி வெட்டோத்தி சுந்தரம் என வெரைட்டியான படங்கள் காத்திருக்கின்றன.
அடுத்தது ரஞ்சிதா, இவர் ஹீரோயினா நடித்தப் படங்கள் கூட அந்த அளவிற்கு ஓடியிருக்காது. ஆனால் சென்ற வருடம் இவர் நித்யானந்தாவுடன் இருந்த உல்லாச வீடியோ டி.வி.யிலும் இணைய தளங்களிலும் மெகா ஹிட். ரஞ்சிதாவை யார் என்று தெரியாவர்கள் கூட தேடிக் கண்டுபிடித்து இவர் முகத்தைப் பார்த்தனர். இணையதள தேடல்களிலும் ரஞ்சிதாவை தேடாத ஆட்கள் இல்லை.

சென்ற வருடம் வெளியான ராவணன் திரைப்படத்தில் ரஞ்சிதா ரெண்டு காட்சிகளுக்கு வந்து போனார். எப்பா! தியேட்டர்ல எவ்வளோ விசில், அந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யாவுக்கு கூட அப்படி ஒரு ஆரவாரம் இல்லை. இப்போ இருக்கிற நிலைமைக்கு இவர் ஒரு படத்தில் நடித்தில் படம் சூப்பர் ஹிட். என செய்வது அதெல்லாம் நடக்குற காரியமா?

வயசு ஆக ஆக அழகு கூடிகிட்டே போகுது ஐஸ்வர்யா ராயின் மேனிக்கு. சென்ற வருடம் ராவணன், எந்திரன் என்று தமிழில் இரண்டு பெரிய படங்களில் நடித்தார். இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் கனவு சென்ற வருடம் நிறைவேறியது. தண்ணீரில் நனைந்தபடி உதட்டை சுழிக்கும் போது ரசிகர்களின் உசுரே போனது…

அமலா பால் என்றால் சிலருக்கு தான் தெரியும், மைனா என்றால் எல்லோருக்கும் தெரியும். மைனா படத்தில் மைனாவாகவே வாழ்ந்தவர் இவர். மைனா படத்திற்கு முன் இரண்டு படத்தில் நடித்திருந்தாலும் இவர் வாழ்வில் விளக்கேற்றி வைத்தது மைனா தான். இப்போது முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர இருப்பதாக பேச்சு. விக்ரமுடன் தெய்வமகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

போன வருடத்துக்கு முந்தின வருடம் வேட்டைக்காரன் படத்தில் ரசிகர்களை வேட்டையாடியவர். இந்த வருடம் கலக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால் தமிழில் வந்ததோ ஒரே ஒரு படம் சிங்கம். காரணம் அனுஷ்கா சென்ற வருடம் தெலுங்கில் ரொம்ப பிஸி. இந்த வருடம் தான் சிம்புவுடன் வானம், ஆர்யாவுடன் வேட்டை என தமிழில் கவனம் செலுத்துகிறார். இருந்தாலும் சிங்கம் படத்தின் கமர்ஷியல் வெற்றியில் சென்ற வருடத்தில் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

தமன்னாவுக்கு அது என்ன நேரமோ! சூர்யா, விஜய் என முன்னனி நடிகர்களின் கவனதை தன் பக்கம் திருப்பினார். சென்ற வருடம் சுறா, தில்லாலங்கடி, பையா என மூன்று படங்கள். பையா சூப்பர் ஹிட். மழையில் தமன்னா போட்ட ஆட்டம்… அடடா மழைடா… செம டா! தனுஷுடன் வேங்கை, கார்த்தியுடன் சிறுத்தை என்று தமன்னாவின் இரண்டு கமர்ஷியல் ட்ரீட் காத்திருக்கிறது. மற்றபடி தெலுங்கில் இந்த வருடம் அம்மணி ரொம்ப பிஸியாம்!

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அயல்நாட்டு அழகி எமி ஜாக்சன். நன்றாக நடித்தது மட்டும் இல்லாது சில தமிழ் வார்த்தைகளையும் பாடல் வரிகளையும் உச்சரித்தார். எமியின் குழந்தைத்தனமான அழகில் உருகிப் போனவர்கள் பலர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோயின்.

சென்ற வருடம் இந்தி பக்கம் போனார் திரிஷா. ஆனா, ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அசினை ஆராதித்த இந்தி உலகம் திரிஷாவிற்கு டாட்டா சொல்லிவிட்டது. திரிஷாவா இது! என்று சொல்லும் அளவிற்கு வேற ஒரு திரிஷாவை காண்பித்தார் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். படமும் சூப்பர் ஹிட். சிம்புவிற்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. திரிஷாவுக்கு நித்தம் நித்தம் முத்தம் வைத்தார். அடுத்து வந்த மன்மதன் அம்பு படத்தில் ரசிகர்கள் ரொம்பவும் ஏமாந்து போனார்கள். இந்த வருடம் அஜித்துடன் மங்காத்தா.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு ஒரு சவாலான கேரக்டர். வில்லியாக கலக்கினார். இவரிடம் இருந்து அப்படி ஒரு நடிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்து இவரின் வாய்க் கொழுப்பால் அவை தவறிப்போனதாம். அளவுக்கு மேல ஆசைப் பட்டால் இப்படித்தான்!

நயன்தாரா என்று சொன்னாலே… அட அதை விடுங்க வேற ஏதாவது புதுசா பேசுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டனர் ரசிகர்கள். கொழு கொழு என்று இருந்த நயன்தாரா சுருங்கி போன கன்னத்துடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தார். படம் ஹிட், ஆனால் ஆளைப் பார்க்க சகிக்கலை. பிரபுதேவாவுடன் காதல் விவகாரத்தில் ஏதோ வெடிக்கப் போகிறது என்று பார்த்தால், வரும் ஆனா வராது கணக்கா இழுத்துக் கொண்டே போகிறது காதல் மேட்டர். அநேகமா இந்த வருடத்தில் கல்யாணத்தில் முடியலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
 

200 தமிழ் பான்ட் டவுன்லோட்

கணினியில் எத்தனை நாளைக்குதான் இங்க்ளிஷ்லையே படித்து எழுதி கொண்டு இருப்பது நம் தமிழையும் வளக்க வேண்டாமா அதனால் தான் இங்கு 200  க்கும் மேற்பட்ட பான்ட் களை  இங்கே தொகுத்துள்ளேன். அனைத்தையும் டவுன்லோட் செய்து நம் தாய் மொழியாம் தமிழை வளர்க  முயற்சி செய்வோம்.
 டவுன்லோட் செய்ய செய்யவும்.


போட்டோசாப் ஆக்சன் டூல்

அன்புள்ள நண்பர்களே,
இந்த வலைப்பூவில் இணையும் நண்பர்களுக்கு 9.54 MB. அளவுள்ள file யை   1 MB  எம்.பி. இல் கம்ப்ரஸ் செய்து வைத்துளேன். download   செய்ய
 இங்கு கிளிக் செய்யவும்.


எனக்கு போட்டோசாப் வேலன் அளவுக்கு பாடம் எடுக்க தெரியாது இருந்தாலும் ஆக்சன் டூல் சிலவற்றை இங்கு பதிவு செய்துளேன்.

மேலும் போட்டோசாப் பற்றி நீங்கள் தெரிந்து  கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
என்ன நண்பர்களே பயனுள்ளதாக இருந்ததா...

Tuesday, January 25, 2011

தேர்தல் அட்டவனை

அன்பான நண்பர்களே,
உங்களுடைய வாக்குரிமையை தெரிந்துகொள்ள வேண்டுமா, உங்களின் பெயர் 2013 ஆம் ஆண்டு பட்டியலில் இருக்கிறதா என தெரிந்து கொள்ள
இங்கு
கிளிக் செய்யவும்
என்ன நண்பர்களே பயனுள்ளதாக இருந்ததா...

ஜாதி கொடுமை

என் இனிய வலைத்தமிழ் மக்களே... அபின், கஞ்சா, பிரவுன் சுகர் போன்ற போதை வஸ்துக்களை விடவும், மது என்ற கொடிய அரக்கனை விடவும், பணம் என்னும் மயக்கத்தில் ஆழ்த்தும் பேராசையை விடவும் நம் இளைஞர்களை அதிகம் பீடித்திருப்பது 'ஜாதி' என்கின்ற கொடிய பேய்.. பிரசவம் பார்க்க மருத்துவனைக்குச் சென்ற என் தாய் மருத்துவர் என்ன ஜாதி என்று கேட்டிருப்பாளோ என்று என்னால் நினைக்க முடியவில்லை.

பிறந்தவுடனேயே கையை, காலை உதைத்துக் கொண்டு வீறிட்டு அலறிய நம்மை, முதலில் தூக்கியது எந்த ஜாதிக்காரர் என்பது நம்மைப் பெற்றெடுத்தவளுக்கேத் தெரியாது.. அக்கம்பக்கம் வீட்டார் முறை வைத்து நம்மைத் தூக்கி மகிழும்போதெல்லாம் ஜாதியைக் கேட்டுவிட்டுத்தான் நமது பெற்றோர், நம்மை அவர்களிடம் ஒப்படைத்திருப்பார்கள் என்று நாம் கருத வாய்ப்பே இல்லை.. நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை மக்களுக்கு மாத தவணையாக மளிகைப் பொருட்கள் கொடுத்த கடைக்காரர், நம்மிடம் ஜாதியைக் கேட்டுத்தான் கடன் கொடுத்திருப்பார் என்ற கருத்துக்குத் துளியும் இடமில்லை.

 தண்ணீருக்காக தெருத்தெருவாக அலைந்தபோது எவனோ ஒரு டிரைவர் ஓட்டி வந்த லாரியில் அடிதடிகளுக்கிடையில் தண்ணீரைப் பிடித்த நம் குடும்பத்தினர், அவ்வளவு கூட்டத்திலும், நெருக்கடியிலும் டிரைவரிடம் ஜாதி கேட்டிருப்பார்களோ என்று நினைக்கவே தோன்றவில்லை. பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, பக்கத்து வீட்டுப் பையனைக் காட்டி "அவன்கூட போய் சூதானமா வந்திரு சாமி.." என்று தெருக்கோடி வரைக்கும் வந்து பயத்துடன் விட்டுவிட்டுப் போன என் அம்மாவுக்கு என் தோழனின் சாதியைப் பற்றிக் கவலையிருந்திருக்காது.. எழுத்துக் கூட்டிச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள் என்ன ஜாதி என்று கேட்டு எனது தந்தையும், அல்லது உங்களது தந்தையும் என்னையும், உங்களையும் பள்ளியில் சேர்த்திருக்க மாட்டார்கள். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நம் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் அவர்கள் என்ன ஜாதி என்று கேட்கக்கூடிய வாய்ப்பே நமக்குக் கிடைத்திருக்காது.

அவர்கள் நமது சக மாணவர்கள்.. நண்பர்கள்.. தோழர்கள்.. அவ்வளவுதான்.. ஓடிப் பிடித்து விளையாடும்போதும், காயம்பட்டு சிராய்ப்புடன் அழுகும்போது துணிகளைக் கொண்டுத் துடைத்துவிட்ட நண்பர்களிடம் என்ன ஜாதி என்று என்றைக்குமே நாம் யாரும் கேட்டதில்லை. எனக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சென்றபோது அரவணைத்துக் கொண்ட நண்பர்கள் அனைவரும் சொன்னது.. "நன்றாக பந்து வீசுகிறாய்.. டீமில் சேர்ந்துவிடு.." என்று.. அவர்களோ, நானோ ஜாதி பற்றிப் பேசிக் கொள்ளவில்லை. "சாயந்தரம் வீட்டுக்கு வா. எங்கம்மா எனக்கு கணக்குச் சொல்லித் தரும்போது நீயும் கூட இருந்து கேட்டுக்க.." என்று என்னை அழைத்துச் சென்ற நண்பனின் தாய், போகும்போதெல்லாம் சோறு போட்டு, சொல்லிக் கொடுத்தவர் அந்த ஒரு வருடப் படிப்பு முடியும்வரையில் கேட்காத கேள்வி, "நீ என்ன ஜாதி..?" என்பது... தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவனையில் உடன் இருந்து தாதி வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஓடி வந்து உதவியர்கள் ஒரு நோயாளியாகப் பார்த்தார்கள்

 என் தந்தையை.. என் ஜாதியைக் கேட்கவில்லை. மருத்துவமனையில்தான் எத்தனை மருத்துவர்கள், எத்தனை நோயாளிகள், எத்தனை தாதிகள்.. அத்தனை பேரும் ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொள்ளாத வார்த்தையும் யார் யார் என்ன ஜாதி என்பதைத்தான்.. தீ விபத்தில் காயம்பட்டு வந்த இளம்பெண்ணைக் காப்பாற்ற, பெட்டில் சேர்த்திருந்த மனைவிக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருந்த ஒருவர், என் கண் முன்னேயே ஒரு பாட்டில் ரத்தம் கொடுத்து அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அந்தப் பெண்ணும் சரி.. அந்த நபரும் சரி பரஸ்பரம் கேட்டுக் கொள்ளவேயில்லை என்ன ஜாதி என்று..? பஸ்ஸில் செல்லும்போது உட்கார சீட் கிடைத்தால் அருகில் இருப்பவர் நம்ம ஜாதி இல்லையே என்று சொல்லி யாரும் அமராமல் இருப்பதில்லை. டாஸ்மாக் கடையில் கூட்டத்தோடு கூட்டமாக 500 ரூபாய் தாளை நீட்டி பாட்டில் கேட்கும்போது, கொடுப்பவன் என்ன ஜாதி என்று எந்த ஜாதிச் சிங்கங்களும் கேட்பதில்லை.

அரை வயிறு சோற்றுக்காக வேறு வழியே இல்லாமல் தன் உடலை விற்க வரும் பெண்ணிடம், எந்த ஆணும் அவளுடைய ஜாதியைக் கேட்ட பின்பு தன் சட்டையைக் கழற்றியதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. பண உதவிக்காக 'தனம்' இருப்பவர்களை அணுகும்போது, அவர்களிடம் ஜாதி கேட்டு தங்களது வீட்டுத் தன்மானத்தை யாரும் அடகு வைப்பதில்லை. தங்களது வசதிக்காக வாகனத்தைத் தேர்வு செய்பவர்கள், அதை இந்த ஜாதிக்காரர் கடைகளில்தான் வாங்குவேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை. எவ்வளவு பசியோடு இருந்தாலும் என் ஜாதிக்கார நாயின் ஹோட்டலில்தான் நான் சாப்பிடுவேன் என்று எந்த ஜாதிக்காரனும் சொல்லி நான் கேட்டதில்லை. என் ஜாதிக்காரனின் பஸ்தான், கார்தான், வாகனம்தான் எனக்கும் என்று எந்த ஜாதிக்கார தறுதலையும் கதறி நான் பார்த்ததில்லை. எந்தக் கட்சியில் நான் இருந்தாலும் தேர்தலின்போது என் ஜாதிக்காரர்களிடம் மட்டும்தான் ஓட்டு கேட்பேன் என்று எந்தவொரு அரசியல்வாதி சொல்லியும் நான் படித்ததில்லை.

 லஞ்சப் பணம் வாங்கும்போது அதைக் கொடுப்பவன் தன் ஜாதிக்காரனா என்று கேட்ட பிறகு பணக்கட்டை உரசிப் பார்க்கும் பழக்கமுள்ள அரசியல்வாதிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.. எனக்குப் பிடித்த மேல்கல்வியைக் கற்கும்போது எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், கடைசிவரையிலும் என்னிடம் கேட்காதது நான் என்ன ஜாதி என்பதுதான். எனக்குப் பிடித்த வேலையில் இறங்கியபோது வாய்ப்பளித்தவர்களுக்கு இன்றுவரையிலும் நான் என்ன ஜாதி என்பது தெரியாது.. எனக்குப் பிடித்தத் தொழிலில் இறங்கியபோதும் உற்சாகமூட்டியவர்களும், தொழிலைக் கற்றுக் கொடுத்தவர்களும் என் ஜாதி என்ன என்று என்னைக் கேட்கவேயில்லை. எனக்குப் பிடித்தத் திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் பற்றிப் பலரிடம் பேசும்போதும் இந்த ஜாதி பிரச்சினை என்னைச் சுற்றி எழவேயில்லை. நண்பர்களை விரட்டி விரட்டி சம்பாதித்துக் கொண்டிருக்கும்போது, அனைவருமே "தலைவா.." என்றுதான் சொன்னார்களே ஒழிய "நீ என்ன ஜாதி..?" என்று கேட்கவில்லை.

 எனக்குப் பிடித்தமான எழுத்துக்கு ஒரு வடிகால் கிடைக்கிறதே என்று வலைத்தளத்தில் நுழைய முயற்சித்த போது 'அரவணைத்த கைகள்' எழுது கோலைத்தான் கைகளில் திணித்ததே தவிர.. 'என் ஜாதி என்ன...?' என்று கேட்டுத் தயங்கி நிற்கவில்லை. எனக்குப் பிடித்த வலைத்தளத்தில் முனைப்போடு ஒரு நாள் இறங்கியபோது சொல்லிக் கொடுத்த 'தெய்வத்திற்கு' இன்றுவரை நான் என்ன ஜாதி என்பது தெரியாது.. எனக்குப் பிடித்தமான வகையில் முதன்முதலில் எழுதிய கட்டுரைக்கு முதல் பின்னூட்டமிட்ட அந்த நண்பரும் 'நான் என்ன ஜாதி..?' என்று கேட்டுப் போடவில்லை. அதற்குப் பதில் போட்ட எனக்கும் அதைக் கேட்கும் எண்ணமில்லை. எனக்குப் பிடித்தமான முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வலைஞர்கள் அனைவரும், 'நான் என்ன ஜாதி..?' என்று கேட்டு தங்களது பேச்சைத் துவக்கவில்லை. எனக்குப் பிடித்த வலைத்தளத்தின் மாநாடுகளில் தங்கு தடையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது என் பெயர்தான் கேட்கப்பட்டதே தவிர, என் ஜாதி என்ன என்ற கேள்வி எங்கும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால்தான் உனது வலைத்தளத்திற்குள் வருகிறோம் என்று எவரும் என்னிடம் சொன்னதில்லையே.. ஆனால்.... இப்போது.... எனக்கு எப்போதும் பிடித்தமான முறையில் தொடர்ந்து எழுதி வரும்போது, "நான் என்ன ஜாதி..?" என்ற கேள்வியே இப்போதெல்லாம் பதிலாக வருகிறதே.. ஏன்? என் வாழ்க்கையின் இத்தனை நாட்களிலும் உடன் இருந்தவர்களுக்கும், இருந்து பழகியவர்களுக்குமே இதுவரையிலும் தோன்றாத எனது ஜாதியைப் பற்றிய சந்தேகம், இப்போது வலைத்தளத்தில் எங்கேயிருந்து தோன்றியது என்பது எனக்குத் தெரியவில்லை.

 குற்றம் என்னுடைய பிடித்தமானதினாலா அல்லது எனது எழுத்தினாலா? எனது பிடித்தமானதினால்தான் என்றால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியினரின் விருப்பமும் ஒரே மாதிரியிருக்கிறதா? எழுத்தினால்தான் என்றால் அத்தனை ஜாதியினரின் எழுத்தும் ஜாதிக்கு ஜாதிக்கு வித்தியாசமாகத் தெரிந்துவிடுமா? எனக்குப் புரியவில்லை. கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும், எனது எண்ணங்களுக்கும் பதில் எனது ஜாதிதான் என்றால், எனது ஜாதியைச் சேர்ந்த அனைவரும் ஏன் என்னுடன் இல்லை..? என் ஜாதியைச் சேர்ந்த பலரும் ஏன் எனது தலைக்கு மேல் அமர்ந்திருக்கிறார்கள்.. நான் கீழே இருக்கிறேன்...? ஜாதிதான் ஒரு மனிதனின் எழுத்தைத் தீர்மானிக்கிறது என்று இந்த 'ஜாதிச் சிங்கங்கள்' எதை வைத்துச் சொல்கிறார்கள்? 'என்ன ஆதாரத்தின் கீழ் இந்தந்த ஜாதிக்காரர்களுக்கு இப்படித்தான் எழுத்து வரும்' என்று இந்த 'ஜாதிச் சிங்கங்கள்' யோசிக்கிறார்கள்..? இந்த 'ஜாதிச் சிங்கங்களும்', நானும் ஒரு நாளில் மரித்துப் போனால் அவரவர் வீடுகளில் ஒரு நாள்தானே வைத்திருக்கமுடியும். மறுநாள் தூக்கித்தானே ஆக வேண்டும்.

 இல்லாவிடில் வீடு நாறிவிடுமே.. கொண்டு போக வேண்டிய இடத்திற்குச் சென்றாலும், எல்லா ஜாதிக்கும் ஒரே மாதிரிதானே.. நெருப்பு, ஜாதிக்கு ஜாதி மாறாதே.. ஒரு சொம்பு.. ஒரே சொம்பு.. துணியால் மூடி ஒரு மணி நேரத்தில் கையில் தருவார்கள்.. அவ்வளவுதான்.. அதில் இதுவரையிலும் ஆட்டம் காட்டிய அத்தனை ஜாதித் திமிரும் இருக்கும். அப்போது அதைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்..? 

Saturday, January 22, 2011

யோகா செய்வது எப்படி?

யோகா செய்வது எப்படி?


வரலாறு

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில: 

  • உட்காசனம்
  • பத்மாசனம்
  • வீராசனம்
  • யோகமுத்ரா
  • உத்தீதபத்மாசனம்
  • சானுசீரானம்
  • பஸ்திமோத்தாசனம்
  • உத்தானபாத ஆசனம்
  • நவாசனம்
  • விபரீதகரணி
  • சர்வாங்காசனம்
  • ஹலாசனம்
  • மச்சாசனம்
  • சப்தவசீராசனம்
  • புசங்காசனம்
  • சலபாசனம்
  • தணுராசனம்
  • வச்சிராசனம்
  • மயூராசனம்
  • உசர்ட்டாசனம்
  • மகாமுத்ரா
  • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
  • சிரசாசனம்
  • சவாசனம்
  • மயுராசனம்
  • உசர்ட்டாசனம்
  • அர்த்த மத்ச்யோந்திராசனம்
  • அர்த்த சிரசானம்
  • சிரசாசனம்
  • நின்ற பாத ஆசனம்
  • பிறையாசனம்
  • பாதாசுத்தானம்
  • திருகோணசனம்
  • கோணாசனம்
  • உட்டியானா
  • நெளலி
  • சக்கராசனம்
  • சவாசனம்/சாந்தியாசனம்
  • பவனமுத்தாசனம்
  • கந்தபீடாசனம்
  • கோரசா ஆசனம்
  • மிருகாசனம்
  • நடராசா ஆசனம்
  • ஊர்த்துவ பதமாசனம்
  • பிரானாசனம்
  • சம்பூரண சபீடாசனம்
  • சதுரகோனோசனம்
  • ஆகர்சன தனூராசனம்
  • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
  • உருக்காசனம்
  • ஏக அத்த புசங்காசனம்
  • யோகா நித்திரை
  • சாக்கோராசனம்
  • கலா பைரப ஆசனம்
  • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
  • கவையாசனம்
  • பூர்ண நவாசனம்
  • முக்த அகத்த சிரசாசனம்
  • ஏகபாத சிரசாசனம்
ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 
  •  இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
  • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.  
  • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை   அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
  • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
  • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள்ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெறவும்.

பத்மாசனம் 

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும். 

தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
 பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.


சிரசாசனம்  

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.
வஜ்ராசனம் : 

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும். 

விபரீதகரணி 

நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.  
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.   

புஜங்காசனம் 


தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.     

பச்சிமோத்தாசனம்

இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.

ரஜினி பேச்சு - விடியோ

Monday, January 10, 2011

ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி!

அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.


அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய  அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம்  என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.
இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது “காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வர்ணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்?’’ என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போடு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.


1930_-35லேயே ஜாதி ஒழிப்பில் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (ஜாத்மத்தோடகமண்டல் என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (address) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (Chapter) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் “ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும்’’  என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார்.  அதற்கும் அவர் நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப், பேச்சை வாங்கி “ஜாதியை ஒழிக்கும் வழி’’ என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.

நாம் இராமயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.
அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றி பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யா போன்றவர்கள் “இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம்’’  என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து  அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக்கூடாத மதம் ((Perfect Religion)  என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும்.  தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம்  மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள். அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.

மைசூர் மகாராஜா புத்தமதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகத் தங்கலா மென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம்கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இதையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிட்டி (பல்கலைக்கழகம்) ஆரம்பிக்காமல் நாமும்  சாகிறவரையில் பேசிக்கொண்டேயிருந்துதான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா? என்று இன்னும் என்னென்னமோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக்  கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் _  - நரகம் இவற்றை  நம்புவதில்லை; சடங்கு,  திதி -_ திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை.’’ இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையே, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு  பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சிசெய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.

அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

தந்தை பெரியார் 28.10.1956 இல் வேலூர் நகராட்சி மன்றத்தில்
  ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை - 7.12.1956)